மங்களம் தரும் காளிகாம்பாள் கவசம்

காளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.
மங்களம் தரும் காளிகாம்பாள் கவசம்
Published on

முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே

முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே

பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே

பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே

காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்

காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்

கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட

காத்தருள்வாயே கற்பக கணபதியே

அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்

ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே

இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே

ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே

உலகம் உய்யவே உலகில் உதித்தவளே

ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே

எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே

ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே

ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே

ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே

ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே

ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்

அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே

அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே

கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே

கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே

காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே

கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே

பாரதிபாடிய பரமகல்யாணியே

வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே

வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே

பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே

பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்

மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே

சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து

சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே

எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்

எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்

குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்

சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்

சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்

வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்

கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்

விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்

நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்

பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்

மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்

நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்

நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்

தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்

வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்

கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்

பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்

காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்

ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்

தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்

வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்

நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்

பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்

கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்

காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்

கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே

அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே

நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்

இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே

போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி

போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி

போற்றி போற்றி அங்கயற்கண்ணியே  போற்றி

போற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி

ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்

நற்பவி நற்பவி நற்பவி ஓம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com