எதிரிகளையும் நண்பர்களாக்கும் அனுமன் ஸ்லோகம்

இத்துதியை ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது தினமும் பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் எல்லாம் நண்பர்களாவார்கள்; கோரிய பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
எதிரிகளையும் நண்பர்களாக்கும் அனுமன் ஸ்லோகம்
Published on

ஹனுமந் நஞ்ஜனீஸூனோ மஹாபலபராக்ரம

லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய

ஸ்ம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்டபூரக ப்ரணதப்ரிய

லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய

-ஹநுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்ரம்.

பொதுப்பொருள்:

ஆஞ்சநேயப் பெருமானே, அஞ்சனா தேவியின் புதல்வரே நமஸ்காரம். மிகுந்த பலத்தையும் எதிரிகளை எளிதாக வெல்லும் சக்தியை யும் கொண்டவரே, நமஸ்காரம். தங்களது வாலாகிய அஸ்திரத்தைப் பிரயோகித்து, என் எதிரிகளின் மனங்களை வீழ்த்தி அவர்களை என்னுடன் நேசம் கொண்டவர்களாக மாற்றித் தாருங்கள். நினைத்த மாத்திரத்தில் கோரிய எல்லாவற்றையும் வழங்கி அருளும் ஆஞ்சநேயா, நமஸ்காரம். உம்மை வணங்குபவரிடம் பேரன்பு கொண்டவரே, நமஸ்காரம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com