இறைவனுக்குரிய நிவேதனங்களும்.. அதை எடுத்து செல்லும் முறையும்...

இறைவனுக்குரிய நிவேதனங்களையும், இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
நிவேதனங்கள்
நிவேதனங்கள்
Published on

கோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள் வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச் செல்வார்கள்.

அதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இறைவனுக்குரிய நிவேதனங்கள்......

சிவன் - வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்.

பார்வதி - சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை.

விநாயகர்- மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக் கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.

முருகன்- வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு. பெருமாள் - லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com