விநாயகர் வழிபாட்டு முறை

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விநாயகர் வழிபாட்டு முறை
Published on

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பழமொழியாக சொல்லுவார்கள். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com