கருப்பசாமிக்கு சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரமும்... தீரும் பிரச்சனைகளும்...

கவலைகள், துன்பங்கள் விரைவில் தீர சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும்.
கருப்பசாமி
கருப்பசாமி
Published on

ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் வேண்டி கொண்டு, அந்த பேப்பரை சுருட்டி அதில் கருப்பு நிற நூலால் லேசாக கட்டி வைக்கவும்.

பின்பு கருப்பு நிற மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, மனதினுள் குறைகள் அனைத்தும் அகல வேண்டும் என கருப்பசாமியை நினைத்து வேண்டுதல் வைத்து, அதை மெழுகுவர்த்தி நெருப்பில் காட்டி எரிய விடவும். எரிந்து முடிந்த பின் அனைத்தையும் அகற்றி விடலாம்.

சிறிய அளவில் உள்ள குறைகள் ஒரே வாரத்தில் நீங்குவதை அனுபவத்தில் காணலாம். பெரிய அளவில் உள்ள பிரச்சனைகளுக்கு 8 வாரங்கள் தொடர்ந்து செய்யவும். நேரம், திசை போன்றவை பார்க்க தேவை இல்லை. பலர் செய்து வெற்றி கண்ட சூட்சுமம் நிறைந்த பரிகாரம் இது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com