பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் ஹோமம்... தீரும் பிரச்சனைகள்...

பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது.தீவினைகள் அடியோடு விலகும்
பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் ஹோமம்... தீரும் பிரச்சனைகள்...
Published on

வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்து குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.

பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது. அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியன்று காலை நேரத்தில் மிளகாய் ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. எரியும் யாக குண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய்களை அர்ப்பணிக்கிறார்கள்.

எந்த விதமான நெடி, கமறல், காரம் போன்றவை இருக்காது என்பது அதிசயமான விஷயம். இந்த யாகத்தை நாம் நடத்தினாலும், மற்றவர்கள் நடத்தும்போது கலந்து கொண்டாலும் மரண பயம் நீங்கும். நோய்கள், துன்பங்கள், மன வேதனைகள், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள், செய்வினைக் கோளாறுகள் அனைத்தும் நீங்கி வாழ்வு சிறக்கும்.

இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com