நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம்

நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம்
நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம்
Published on

நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டோணி ஜெரோம், இணை பங்குதந்தை மைக்கேல் ஐன்ஸ்டீன், பங்கு பேரவை துணைத்தலைவர் டென்னிஸ் பிராங்ளின், செயலாளர் சார்லெட் மேரி, துணை செயலாளர் சகாய ஞானதிரவியம், பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ் ஆகியோர் வழிகாட்டுதலில் பங்குபேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com