

முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உள்ள கத்தோலிக்க சேவா சங்கம் சார்பில் கிறிஸ்து அரசர் பெருவிழா நடந்தது. காலையில் நடந்த திருப்பலியில் கத்தோலிக்க சேவா சங்க உறுப்பினர்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.
திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பங்கு அருட்பணியாளர் சேவியர் புரூஸ் மற்றும் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள்.