குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடுகளை போக்கும் அம்மன் ஸ்லோகம்

அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.
குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடுகளை போக்கும் அம்மன் ஸ்லோகம்
Published on

அழகிய மதுரையில் மீனாட்சி

அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி

நான்மாடக் கூடலிலே அருளாட்சி

தேன்மொழி தேவியின் தேனாட்சி

சங்கம் முழங்கிடும் நகரிலே

சங்கரி மீனாளின் கருணையிலே

மீன்கொடி பறக்கும் மதுரையிலே

வான்புகழ் கொண்டாள் தாயவளே

அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்

ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்

வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்

கருணையுடன் நம்மை காத்து நிற்பாள்

முத்து பவளம் மரகத மாணிக்கம்

பொன் ஆபரணம் பூண்டாள்

சக்தி மனோகரி சந்தர கலாதரி

தென் மதுராபுரி ஆண்டாள்

சித்திரை மாதம் தேவி மீனாட்சி

சொக்க நாதரை மணந்தாள்

பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட

அற்புத லீலைகள் புரிந்தாள்

மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த பாடலை அனைத்து நாட்களிலும் பாடி வழிபடலாம் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலிருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும். அதிலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேருவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com