ஏகாந்த சேவை

ஒவ்வொரு நாளும் இரவில் ஏகாந்தசேவை நடைபெறுகிறது. பழங்கள், பாதாம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
ஏகாந்த சேவை
Published on

ஒவ்வொரு நாளும் இரவில் ஏகாந்தசேவை நடைபெறுகிறது.

இந்த ஏகாந்த சேவைக்காக போக ஸ்ரீநிவாசனை வெல்வெட் விரித்த மெத்தையில் வைத்து, வெள்ளிச் சங்கிலிகள் இணைத்த ஊஞ்சல் கட்டிலில் சயனிக்கச் செய்கின்றனர்.

சயன மண்டபத்திலேநடைபெறும் இச்சேவையின்போது முக்கியஸ்தர்கள் மாத்திரமே உடனிருக்கிறார்கள்.

பெருமாளுக்கு வழக்கமான நைவேத்தியங்களைச் செய்யும்போது அவற்றை வகுளாதேவி பார்வையிடுகிறார்.

அவருக்கும் அம்மவாரி பாயசம் படைக்கப்பெறுகிறது.

பழங்கள், பாதாம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

கி.பி. 1513-ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயர் இத்திருக்கோவிலுக்கு ஏராளமான

தங்க, வைர நகை களைக் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

மீண்டும் கி.பி. 1517ம் ஆண்டில் ஏராளமான தங்க அணிகலன்களை வழங்கினார்.

அச்சமயம் இவரது இரண்டு தேவியர்கள் இரண்டு தங்கக் கிண்ணங்களை பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக அளித்திருக்கிறார்கள்.

அந்த பொற்கிண்ணங்களில்தான் ஏகாந்த சேவையின்போது வெங்கடேசப் பெருமாளுக்கு பால் வழங்கப் பெறுகின்றது.

மேலே கண்ட நித்திய சேவைகள் ஒவ்வொரு நாளும் நடை பெறும் சேவைகள் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com