விஜயலட்சுமி தரும் வசதிகள்

செம்பின் மீது தூய்மையாகக் கழுவப்பட்ட தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும். செம்பிற்கும் தேங்காய்க்கும் சந்தனம்,குங்குமம்,திலகம் ஆகியன இட வேண்டும். மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
விஜயலட்சுமி தரும் வசதிகள்
Published on

வாழ்க்கையில் நன்கு வசதியோடு வாழ வேண்டுமென்றால் விஜயலட்சுமியை வழிபட வேண்டும்.

விஜயலட்சுமியை முறைப்படி வணங்கினால் வெற்றி கிட்டும்.

முதல் நாள் பூஜையை ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கவேண்டும். ஆனால் அன்று தேய்பிறையாகவோ அஷ்டமி நவமியாகவோ. கரிநாளாகவோ இருக்கக்கூடாது. அவ்வீட்டில் இறந்தவர் எவருக்கேனும் திதி நாளாயும் இருக்கக்கூடாது.

மலர்களுள் செந்தாமரை, வன்னி,ரோஜா, மல்லிகை, முல்லை, சந்தன முல்லை, சம்பங்கி, மனோரஞ்சிதம் ஆகிய மலர் இனங்களைப் பயன்படுத்தலாம்.

வீட்டிலுள்ள தூய்மையான அறையில், நடுப்பகுதியில் கிழக்கு முகமாகப் பீடம் அமைக்க வேண்டும். அதில் சதுரமாக நெல்லைப்பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு பித்தளைத்தட்டில் பச்ச அரிசியைப் பரப்ப வேண்டும்.

அதன் மீது மலர்கள் சுற்றப்பட்ட நீர் நிறைந்த செம்பை வைக்க வேண்டும். மாவிலைகளைக் செம்பின் உள் பக்கம் ஒரத்தில் வைக்க வேண்டும்.

செம்பின் மீது தூய்மையாகக் கழுவப்பட்ட தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும்.

செம்பிற்கும் தேங்காய்க்கும் சந்தனம்,குங்குமம்,திலகம் ஆகியன இட வேண்டும். மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

வாயிலில் மாக்கோலம் இட வேண்டும். பூஜை தொடங்கும் போது வாசலில் அகல் விளக்கேற்ற வேண்டும்.

பிரசாதமாகத் தயாரித்த போருள்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பூஜையை ஆரம்பிக்கலாம்.

இந்தப் பூஜையைத் தனியாகவோ பலர் கூட்டாகவோ செய்யலாம்.

முதலில் விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு, அருகம் புல்லால் அர்ச்சனை செய்து,கற்பூர தூப தீபம் காட்ட வேண்டும்.

விஜயலட்சுமி பூஜையைத் தொடங்கவேண்டும். நூற்றெட்டு நாமாவளிகளைக் கூறி, மலர் அர்ச்சனை முடிந்து தூப தீபம் காட்டி, வணங்க வேண்டும்.

பூஜை முடிந்ததும் மூன்று சிறுமிகளுக்கு துணி தானம் என்னும் பட்டுத்துணி, தாம்பூலம், கல்கண்டு, கனி ஆகிய வற்றைத் தர வேண்டும்.

இயன்ற அளவு பணமும் தானமாகக் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு மற்றவர்க்குப் பிரசாதங்களைக் கொடுத்து விட்டுத்தாங்கள் பயன்படுத்தலாம்.

இந்தப்பூஜையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று, தொடர்ந்து இருபத்தொரு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.

இவ்வாறு இருபத்தொரு நாளும் முடித்த பிறகு, எவ்வளவு இயலுமோ அந்த அளவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

வழிபடுவதற்கான குறிப்புகள்

வடிவம் :- நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

பூஜை :- 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

திதி :- அஷ்டமி

கோலம் :- பத்ம கோலம்

பூக்கள் :- மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

நைவேத்தியம் :- பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

ராகம் :- புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

பலன் :- நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com