வேத நாராயண பெருமாள் சுவாமி கோவில்

மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன் மையான அவதாரமாகும். இங்கு அருளும் பெருமாளின் திருப் பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.
வேத நாராயண பெருமாள்  சுவாமி கோவில்
Published on

மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன் மையான அவதாரமாகும்.

கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான்.

அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.

நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் தலத்தில் கொடுத்ததன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப் பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com