உலகின் முதல் வழிபாடு

பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான்.
உலகின் முதல் வழிபாடு
Published on

காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ் சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று.

இதனை சூரிய நமஸ்காரம் என்று சிறப்பாக குறிப்பிடுவர்.

இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான்.

இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது.

பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது.

ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான்.

இதுவே சூரியவழிபாட்டின் தொடக்கமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com