திருவெண்காடு தல தீர்த்தங்கள்

காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களாலும் தலபுராணம் இத்திருக்குளங்களை அழைக்கிறது. பூம்புகாரில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இருதடாகங்கள் இருந்தன
திருவெண்காடு தல தீர்த்தங்கள்
Published on

தீர்த்தச் சிறப்பு மிக்கது திருவெண்காட்டுத் தலம் திருக்கோவிலின் உள்ளேயே அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று பெயர்களில் மூன்று திருக்குளங்கள் உள்ளன.

காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களாலும் தலபுராணம் இத்திருக்குளங்களை அழைக்கிறது.

உமையின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவன் இங்கு நடனமாடிய போது அவர் சிந்திய மூன்று துளி

ஆனந்தக் கண்ணீரும் முக்குளங்களாயினவென்றும், பின்னர் அகோரமூர்த்தியின் மூன்று கண்களும் சிந்திய

நீர்த்துளிகளும், முக்குளத்திலும் முறையே கலந்தனவென்றும் தலபுராணம் கூறும்.

பூம்புகாரில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இருதடாகங்கள் இருந்தனவென்றும் அவைகளில்

மூழ்கிக் காமவேள் கோட்டத்தைக் கைதொழுவார் தம் கணவரைக் கூடுவர் என்றும் தேவந்தி என்பவள் கண்ணகிக்கு கூறுகிறாள்.

அவள் குறிப்பிடும் சோம, சூரிய குண்டங்கள் திருவெண்காட்டு சோம, சூரிய தீர்த்தங்களாக இருந்திருக்கக் கூடும் என்று சிலர் கூறுவர் என்று டாக்டர் உ.வே.சா. சிலப்பதிகாரத்தில் குறிப்பு வரைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com