திருக்கடையூர் மார்க்கண்டேயர் ஆலயம்

மார்கண்டேயருக்கு தனி சந்நிதி உள்ளது. மார்கண்டேயரின் தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கடையூர் மார்க்கண்டேயர் ஆலயம்
Published on

திருக்கடையூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மணல்மேடு என்னும் கிராமம் இருக்கிறது.

அங்கே தான் மார்க்கண்டேயர் தங்கி இருந்த ஆசிரமம் இருந்தது. தற்போது அந்த ஆசிரமம் மார்கண்டேயர் கோவிலாக மாறியுள்ளது.

மிருகண்டு முனிவர், மிருகண்டேஸ்வர் என்னும் பெயருடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

மார்கண்டேயருக்கு தனி சந்நிதி உள்ளது. மார்கண்டேயரின் தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர், ஆஞ்சநேயர், சுப்ரமணியர் என்று சுவாமி விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

குழந்தைப்பேறு அற்றவர்கள், திருமணம் கைகூடாதவர்கள், நோய்த் தொல்லைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்புகிறவர்கள் அனைவரும் இந்தக் கோவிலில் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலன் கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com