தலையில் வெட்டுப்பட்ட லிங்கம்

அதில் லிங்கத்தின் தலையில் வெட்டு காயம் இருப்பதை பக்தர்கள் பார்க்க முடியும். ஞாயிறு தலத்துக்கு வழிபட செல்லும்போது நினைவில் வைத்துக் கொண்டு இதை தவறாமல் பார்த்து வாருங்கள்.
தலையில் வெட்டுப்பட்ட லிங்கம்
Published on

சோழ மன்னன் வடக்கு நோக்கி படையெடுத்து வந்தபோது இந்த தலத்தில் உள்ள குளத்தில் வித்தியாசமாக இருந்த தாமரை மலரை பறிக்க முயன்றான்.

அந்த தாமரை விலகி செல்லவே அதன் மீது தனது வாளை வீசினான்.

அந்த வாள் மலர் மீது பட்டு வெட்டியது. ரத்தம் பீறிட்டது. இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில்

கருவறையில் உள்ள லிங்கத்தின் தலையிலும் வெட்டுக்காயம் உள்ளது.

ஆனால் மலர் அலங்காரங்களால் புஷ்பரதேஸ்வரர் லிங்கம் மறைக்கப்பட்டு விடுவதால்

அதன் மீதுள்ள வெட்டு காயத்தை பக்தர்களால் காண இயலாது.

என்றாலும் நந்தி அருகே உள்ள மண்டபத்தின் தூணில் புஷ்பரதேஸ்வரர் லிங்கம் இடம் பெற்றுள்ளது.

அதில் லிங்கத்தின் தலையில் வெட்டு காயம் இருப்பதை பக்தர்கள் பார்க்க முடியும்.

ஞாயிறு தலத்துக்கு வழிபட செல்லும்போது நினைவில் வைத்துக் கொண்டு இதை தவறாமல் பார்த்து வாருங்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com