ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் சிறப்புகள்

அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார்.
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் சிறப்புகள்
Published on

1. கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

2. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்பது, பகவான் கிருஷ்ணன் இப்பூமியில் மானிடராக அவதாரம் செய்த திருநாளாகும்.

3. தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம்.

4. கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார்.

இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று அவலை வைத்து நிவேதனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

5. கண்ணனைக் காணாத கோபியர்கள் பலவிதமாகப் புலம்பினார்கள்.

அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com