சூரியன் பதினாறு போற்றி

பாடலை பாடி முடித்ததும் ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
சூரியன் பதினாறு போற்றி
Published on

''ஓம் ஆதவனே போற்றி

ஓம் உடல்நலம் தருவாய் போற்றி

ஓம் உள்வினை நீக்குவாய் போற்றி

ஓம் மும்மூர்த்தியே போற்றி

ஓம் மூத்தவனே போற்றி

ஓம் மூலப்பொருளே போற்றி

ஓம் ஒளிபொருந்தியவா போற்றி

ஓம் தெளிவுடையோய் போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் வட்ட ஒளியோனே போற்றி

ஓம் வரந்தரும் வள்ளலே போற்றி

ஓம் அழகு முகத்தோனே போற்றி

ஓம் அதிசயப்பொருளே போற்றி

ஓம் ஆதாரநிலையே போற்றி

ஓம் இயற்கைச் சுடரே போற்றி

ஓம் எல்லையற்றவா போற்றி

ஓம் சுகம்தரும் சுந்தரனே போற்றி! போற்றி!''

என்று சொல்லி தேங்காய் உடைத்து வைத்து ஊதுபத்தி, நெய்தீபம் காட்டி படைக்கும் பொருட்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

பிறகு கலசத்துக்குக் கற்பூர ஆரத்தி காட்டி,

''ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமகி

தந்நோ சூர்ய ப்ரசோதயாத் - சூர்ய நாராயண மூர்த்தியே நம:

கற்பூர நிராஜனம் தர்சயாமி''

என்ற மந்திரப் பாடலை சொல்ல வேண்டும்.

பாடலை பாடி முடித்ததும் ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு, அந்த நபரின் தலையில் கலசநீரை ஊற்றி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com