சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான்

செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விஷேச வழிபாடு செய்தல் வேண்டும். நெய் அல்லது இலுப்பை எண்ணைய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான்
Published on

சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான தன் சிறுவைதனில் மேவும் பெருமான் வள்ளி மணவாளனாக

அருட்காட்சியளிக்கும் அற்புதக் கோலத்தை வழிபாடு செய்பவர்கள்.

இனிமையான இல்லற வாழ்க்கையைப் பெற்று இன்பமடைவர். தடைபட்ட திருமணங்கள் தடைகள் நீங்கப் பெற்று

மனம் நிறைந்த மங்கல வாழ்வுப்பேறு கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும், பூரம், உத்திரம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும் பவுர்ணமி, சுக்லத்விதியை, சுக்ல சஷ்டி,

செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விஷேச வழிபாடு செய்தல் வேண்டும்.

நெய் அல்லது இலுப்பை எண்ணைய் விளக்கு ஏற்றியும், பழங்கள், தேன், சுத்தமான (கலப்படமற்ற) சந்தனம்,

பச்சைக் கற்பூரம் முதலான அபிஷேகங்கள் செய்தும், சிவப்பு பச்சை வஸ்திரங்கள் அணிவித்தும்,

தேன் கலந்த தினை மாவிளக்கு ஏற்றியும், ரோஜா, சண்முகம், சிவப்புத்தாமரை, சிவப்பு அரளி,

மகிழம்பூ முதலிய ஏதாவதொரு மலர்மாலை அணிவித்து ஷடாக்ஷர அஷ்டோத்ரம்,

ஷடாக்ஷரத்ரிசதி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி 108 ஆகிய ஏதாவதொரு அர்ச்சனை செய்தல் வேண்டும்.

(பூக்களை கிள்ளி அர்ச்சனை செய்தல்கூடாது. முழுப்பூவாகத்தான் அர்ச்சிக்க வேண்டும்-.)

வெண்பொங்கல், தேன்குழல், கடலைப்பருப்பு பாயாசம் முதலிய ஏதாவதொரு நைவேத்தியம் செய்தால்

எல்லா நலன்களும் பெற்று இன்ப மயமான இல்லற வாழ்வை அடையலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com