சேன்பாக்கம் சுயம்பு விநாயகர்

விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும்.
சேன்பாக்கம் சுயம்பு  விநாயகர்
Published on

வேலூர் அருகே உள்ள சேன்பாக்கம் என்ற ஊரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் 11 சுயம்பு விநாயகர்கள் உள்ளனர்.

இத்தனை சுயம்பு விநாயகரை வேறு எங்கும் பார்க்க முடியாது.

விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது ஏன்?

விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும்.

இந்த விழாவை 1895 ம் ஆண்டு நிலகர் தொடங்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர்.

விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும் அவருக்கு அன்னை.

எனவே தாய் கங்கையுடன் விநாயகர் ஐக்கியமாகி விடுகிறார் என்பதை சுட்டிக் காட்டவே விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதாக ஐதீகம்.

X

Maalai Malar
www.maalaimalar.com