செவ்வாய் தோஷம் நீங்க விநாயகரை வழிபடுங்கள்

அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாயில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.
செவ்வாய் தோஷம் நீங்க விநாயகரை வழிபடுங்கள்
Published on

பரத்துவாச முனிவர் யாத்திரை' சென்றபோது நர்மதை நதியில் நீராடினார்.

அங்கே ஒரு மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார்.

இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை பிறந்தது. `அங்காகரன்' என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.

அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் வழங்கினார்.

அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.

செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com