சைவ வைணவ பேதமற்ற கோவில்

பொதுவாக மகாலட்சுமியை தரிசிக்க வேண்டுமெனில் அவளை மகாவிஷ்ணுவுடன் மணக்கோலத்தில் தரிசிப்பது வழக்கம். இவ்வாலயத்தில் மகாலட்சுமி மகரிஷியின் மகளாக தோன்றி வளர்ந்து கன்னியாக உலா வந்திருக்கிறாள்.
சைவ வைணவ பேதமற்ற கோவில்
Published on

திருநரையூர் தலத்தில் சைவ வைணவ பேதம் எதுவும் கிடையாது.

மேதாவி மகரிஷி என்கிற ஒரு மகரிஷி கடுந்தவம் புரிந்து இந்த ஆலயத்திலே மகாலட்சுமியை மகளாக அடைந்தார்.

நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகிற தலத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு லட்சுமியை கன்னிகாதானம் செய்து கொடுத்த அற்புத சக்தி வாய்ந்த தலமாகும் இது.

பொதுவாக மகாலட்சுமியை தரிசிக்க வேண்டுமெனில் அவளை மகாவிஷ்ணுவுடன் மணக்கோலத்தில் தரிசிப்பது வழக்கம்.

இவ்வாலயத்தில் மகாலட்சுமி மகரிஷியின் மகளாக தோன்றி வளர்ந்து கன்னியாக உலா வந்திருக்கிறாள்.

அவளை ஸ்ரீபர மேஸ் வரனும், பார்வதியும் மகளாகப் பாவித்து மகாவிஷ்ணுவிற்கு மணம் செய்து கொடுத்திருக்கின்றனர்.

இவ்வாலயத்தின் தனிச் சிறப்பு ஒவ் வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் மகா லட்சுமிக்கு 1008 தாமரை மலர்களி னாலே குபேர மகாலட்சுமி ஹோமம் செய்து வருவதாகும்.

இவ்வாலயத்திற்கு வருபவர் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெற்றியை தந்தருள்பவள் ஸ்ரீசவுந்தரநாயகி (அழகம்மை).

இங்கு சுயவரதம், அட்சய மாலை, தாமரைப்பூ, இலைகளை நான்கு திருக்கைகளில் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள் தேவி.

இங்குள்ள சண்முகருக்கு பிரதி செவ்வாய்க்கிழமை சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது.

ஆறுவித புஷ்பங்கள், நெய்வேத்தியங்கள், பலவகைப் பழங்கள், பழரசங்கள், இவைகளைக் கொண்டு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com