சபரிமலை கடுத்த சுவாமிக்கு சுருட்டு

கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு. கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.
சபரிமலை கடுத்த சுவாமிக்கு சுருட்டு
Published on

அய்யப்பனுடைய படையில் சிறந்த சேனாதிபதியாகவும், பிரதான வீரராகவும் கடுத்த சுவாமி திகழ்ந்தார் என்று சொல்வார்கள்.

மேலும் பந்தள ராஜாவிற்காக யுத்தங்களில் வென்று வாகை சூடியதாக கடுத்தசுவாமி பற்றி கூறப்படுகிறது.

கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.

இவருக்குப் பொரி, அவல், மிளகு,பழம் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

பதினெட்டுப் படிக்குக் கீழேயும் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

கடுத்த சுவாமிக்கு சிலர் சுருட்டும் காணிக்கையாக வைக்கின்றனர்.

பதினெட்டாம் படிக்குத் தொட்டது போல் வடக்கு பக்கத்தில் கருப்பசாமி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com