ருத்ராட்சம் மரம் தோன்றிய இடம்

சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார். ‘அகாரம்’ என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.
ருத்ராட்சம்  மரம்  தோன்றிய இடம்
Published on

திரிபுராசுரன் என்ற அரக்கன் ஒரு தடவை ஸ்ரீபிரம்மா, பரமேசுவரனிடம் வரம் பெற்று வல்லமை அடைந்து அதனால் கர்வம் கொண்டு தேவர்களை இம்சிக்க ஆரம்பித்தபொழுது ஸ்ரீவிஷ்ணு பரமேசுவரனை அணுகி இதற்கு விமோசனம் காண வழி சொன்னார்.

சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.

'அகாரம்' என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.

'அகோர அஸ்த்ர' நிர்மாணத்தின் பொருட்டு தன் மூன்று கண்களையும் மூட பல வருடங்களுக்குப் பின் தன் கண்களை திறந்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.

அந்த கண்ணீர் துளிகள் பூமியில் ஆங்காங்கே தெறித்து விழுந்தன.

அப்படி கண்ணீர் துளிகள் விழுந்த இடங்களில் ருத்ராட்ச மரங்கள் முளைத்தன.

அப்படி ஈசனின் கண்களில் இருந்து கண்ணீர் தெறித்து விழுந்து ருத்ராட்ச மரம் உருவான தலங்களில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.

இதனால் ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்கு ருத்ராட்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து பல முகங்கள் உடையதாக இருக்கும்.

ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு விதை இருக்கும்.

அக்கினித்தேவன் மூன்று முக ருத்ராட்சத்திற்கு அதிபதி என்று கூறப்படுகிறது.

ஏழு முக ருத்ராட்சம் செல்வத்தைக் கொண்டு வரும் தன்மையையுடையது. அதாவது லட்சுமி தேவியை குறிக்கிறது.

மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை, ஈஸ்வர அனுக்கிரகம், பஞ்சபூத அனுக்கிரகம் பெறுவதற்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

செந்நிறமாக செப்புத்தாது போல் காட்சியளிக்கும் ருத்ராட்சக் காய்களில் அற்புதமான, அபரிமிதமான காந்த சக்தி அடங்கி உள்ளது.

இப்படி இயற்கையிலேயே காந்தசக்தி அடங்கிய காய் வேறு எதுவும் கிடையாது.

இதில் அடங்கி உள்ள காந்த சக்தியால் நம் உடலும், உள்ளமும் பயன் அடையும்.

ருத்ராட்சக் கொட்டை நம் உடலை தொட்டுக் கொண்டிருந்தால் உடலில் உள்ள உஷ்ணத்தையும், உள்ளத்தில் உள்ள கொந்தளிப்பையும் கிரகித்து பிளட் பிரஷரையும், மன சஞ்சலத்தையும் சீராக்கி விடும்.

பிளட் பிரஷர் உள்ளவர்கள் ருத்ராட்சக் கொட்டையை தாங்கள் குடிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் மிதக்கவிட்டுப் பின் அந்த நீரை அருந்த பிரஷர் கட்டுப்படும். குறையவும் செய்யும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com