புதன் தோஷ பரிகாரம்

தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும்.
புதன் தோஷ பரிகாரம்
Published on

புத பகவானுக்கு புதன் கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம், மரகதமணி, வெண்தாமரை

இவற்றால் அலங்காரம் செய்து, புதனைப் பற்றிய ஸ்தோத்திரங்களை ஓதி, நாயுருவி சமித்தால் யாகத் தீ எழுப்பவும்.

பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி செய்து, தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்யவும்.

தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.

புத பகவானை வழிபடும்போது ராகம் தெரிந்தவர்கள் நாட்டக் குறச்சி ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடுவது மிகுந்த சிறப்பாகும்.

புதனுக்கான கோலம்

அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும்.

விளக்கேற்றி வைத்து புதனுக்குரிய பாடல்களை, தியான சுலோகங்களைச் சொல்லி வழிபடவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com