

ஒரு ஆலயத்தில் கொடி மரம் இருந்தால் அந்த ஆலயம் அனைத்து வகை ஆகம பூஜைகளையும் செய்யும் சிறப்புடையது என்று அர்த்தமாகும்.
தாத்ரீஸ்வரர் ஆலயத்திலும் கொடி மரம் உள்ளது.
ஆனால் பிரமோற்சவம் மட்டும் ஏனோ நடைபெறாமல் உள்ளது.
ஆதிகாலத்தில் இந்த தலத்தில் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடந்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில் அதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இன்று வரை அந்த தடை நீடித்தபடி உள்ளது.
மீண்டும் பிரமோற்சவம் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்பது ஏராளமான பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.