பிராணநாதரிடம் பிரார்த்தனை

அங்கே விநாயகரைப் பிரதிஷ்டை செய்து சங்கல்பம் செய்து கொண்டு தவத்தை மேற்கொண்டனர். உதயாநிதி ஏழரை நாழிகைக்குள் எருக்க இலையில் ஒரு பிடி தயிர் அன்னத்தை வைத்துப் புசித்தனர்.
பிராணநாதரிடம் பிரார்த்தனை
Published on

அகத்தியரிடம் விடை பெற்றுக் கொண்டு நவக்கிரகர்கள் அர்க்க வனத்தின் வடகிழக்குப் பகுதிக்குச் சென்று ஒரு இடத்தை தேர்ந்து கொண்டனர்.

அங்கே விநாயகரைப் பிரதிஷ்டை செய்து சங்கல்பம் செய்து கொண்டு தவத்தை மேற்கொண்டனர்.

கார்த்திகை மாதம் முதல் ஞாயிறன்று நோன்பு தொடங்கி கடுமையாக எழுபத்தெட்டு நாட்கள் வரை கடைப்பிடித்தனர்.

இந்த நோன்புக் காலத்தில் வரும் திங்கட்கிழமைகளில் விடிவதற்கு முன் காவிரியில் நீராடிப் பிராணநாதரை வழிபட்டனர்.

உதயாநிதி ஏழரை நாழிகைக்குள் எருக்க இலையில் ஒரு பிடி தயிர் அன்னத்தை வைத்துப் புசித்தனர்.

இவ்வாறு எழுபத்தெட்டு நாட்கள் நோன்பு முடித்து எழுபத்தொன்பதாம் நாள் திங்கட்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com