பல்வேறு நன்மைகளை அருளும் அஷ்டமி யாகம்

திருமணம் தடைபட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
பல்வேறு நன்மைகளை அருளும் அஷ்டமி யாகம்
Published on

புதுவை பிரத்தியங்கரா தேவி கோவிலில் அஷ்டமி யாகம் மிகச்சிறப்பானது.

பவுர்ணமியை அடுத்து வரும் 8 வது நாள் தேய்பிறை அஷ்டமியில் இரவு 10.30 மணிக்கு யாகம் தொடங்கும்.

நள்ளிரவு 3 மணிக்கு முடியும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் இந்த யாகம் நடக்கிறது.

'அஷ்டமி தரிசனம் அஷ்ட ஐஸ்வரியம் தரும்' என்பது சிரபசித்தர் வாக்கு.

இந்த யாகத்தில் கலந்துகொண்டால் ஏவல், செய்வினை விலகிச் செல்லும்.

நோய்கள் தீரும். குடும்ப கவலைகள் மாறும்.

வியாபாரம், தொழில் தடைகள் நீங்கி வளர்ச்சி அடையும். கைவிட்டுப்போன சொத்துக்கள் மீளும்.

திருமணம் தடைபட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜை நடக்கிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.

இந்த பூஜைகளில் கலந்து கொள்கிறவர்களும் பல நன்மைகள் அடைவார்கள் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com