நினைத்ததை நிறைவேற்றும் வாராகி மாலை

நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது. இது பகை அல்லல் அகற்றும் பாமாலை.
நினைத்ததை நிறைவேற்றும் வாராகி மாலை
Published on

எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை

நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது.

ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பாடல் பாடியே அவர்களை மகிழ்வித்தே நம் முன்னோர்கள் சித்தர்கள்

கண்கொள்ளா காட்சி கண்டு முக்தி பெற்றனர்.

அதேபோலதான், நீங்கள் அன்னையின் வரலாறுகளை அவள் மகிமைகளை தெரிந்து கொண்ட பிறகு

அவள் அருளை பெற உங்கள் மனம் துடிக்கின்றது என நான் அறிவேன்.

வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து

ஓடிவந்து நிற்பது 'வாராகிமாலை' எனும் அற்புத பாமாலைதான்.

இது பகை அல்லல் அகற்றும் பாமாலை, இந்த வாராகி மாலையை மாலை நேரத்தில் யார் பாடி அன்னையை

வழிபடுகிறார்களோ அவர் நிச்சயம் வெற்றியாள ஞானியே, இந்த வாராகி மாலையில் 32 பாடல்கள் அடங்கி உள்ளது.

இந்த 32 பாடல்களும் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு மிகப்பெரிய சிறப்புகளையும், நல்ல வாழ்வையும் அளிக்கவல்லது.

வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது.

உலகம் நலம்பெற, என் மக்கள் வாழ்வு வளம்பெற அன்னை அருள் ஆட்சி செய்யட்டும் என்றுதான்

இந்த மாபெரும் பொக்கிஷத்தை உங்களுக்கு விளக்கத்தோடு வழங்குகிறேன்.

அனைவரும் இதனை படித்து சகலபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும்.

அதுவே என் அன்னை வாராகியின் இலக்கு.

X

Maalai Malar
www.maalaimalar.com