

ஐந்தாம் நாளில் சக்தித்தாயை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும்.
சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
தீயவற்றை சம்ஹரிப்பவள்.
இவளின் வாகனம் கருடன்.
மலர் வகைகளில் மனோரஞ்சிதம் அல்லது பாரிஜாதம் மலர்களையும்,
இலைகளில் திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்
இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம்:- எலுமிச்சை சாதம்.