நவநீத கிருஷ்ணா... கார்வண்ணா...

நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.
நவநீத கிருஷ்ணா... கார்வண்ணா...
Published on

கிருஷ்ண பரமாத்மாவுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.

அதுபற்றி மகாபெரியவர் சொன்ன ஒரு சிறிய விளக்கம்...

நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.

'நவ' என்றால் புதுசு என்று அர்த்தம். 'நீதம்' என்றால் எடுக்கப்பட்டது என்று அர்த்தமாகும்.

புத்தம் புதுசாக அதிகாலை நேரத்தில் பசும்பாலில் உறை ஊற்றி சாயங்காலமே அந்த தயிரை எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம் என்று சொல்லப்படுகிறது.

அதோடு சேரும் கிருஷ்ணன், நவநீத கிருஷ்ணராவார்.

கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துள்ளனர்.

அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

அவனைக் 'கார்வண்ணன்' என்று சொல்வார்கள்.

மேகம் எத்தனைக்கு எத்தனை கருப்போ அத்தனைக்கு அத்தனை அதிகமாக மழை நீரை கொட்டும்.

அந்த தண்ணீர் கருப்பாகவா இருக்கிறது? இப்படி பரம பிரேம தாரையைப் பிரவாகமாக கொட்டுகிறவனே கிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com