நவக்கிரகங்கள்-புதன்!

கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார். புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடு
நவக்கிரகங்கள்-புதன்!
Published on

புதன் பகவான்!

கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.

புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுவதோடு, புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயரும் உண்டு.

புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடுவார்.

திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.

மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர்.

சந்திரனின் மைந்தன் புதன் இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

புதனின் பகவானுக்கு உகந்தது:

நிறம் - பச்சை,

தானியம் - பச்சை பயறு,

நவரத்தினம் - மரகதம்,

உலோகம் - பித்தளை,

பருவம் - இலையுதிர் காலம்,

பஞ்ச பூதம் - நிலம் ஆகும்.

புத பகவான்-காயத்ரி மந்திரம்

ஓம் கஜத்வஜாய வித்மஹே

சுகஹஸ்தாய தீமஹி

தந்நோ புத ப்ரசோதயாத்;

எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.

புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவானை வழிபட எல்லா நலன்களையும் பெற்று வாழலாம்.

நாம் வீட்டில் பூஜை செய்யும்போது 5 மண் விளக்கு ஏற்றி வழிபடுவதோடு, இஷ்ட தெய்வத்தை வணங்கி அதோடு பெருமாளை வழிபடலாம்.

மேலும் அந்த நாளில் பச்சை பயறு வேகவைத்து பசு மாட்டுக்கு கொடுப்பது நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com