நவக்கிரகங்களை வழிபடும்போது...

நவகிரகங்களை வழிபடும் போது நவகிரக ஸ்தோத்ரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பாகும். கோவிலை விட்டு வெளிவரும் முன்பு மறுபடியும் சண்டிகேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பு தரும்.
நவக்கிரகங்களை வழிபடும்போது...
Published on

நவகிரகங்களை வழிபடும் போது நவகிரக ஸ்தோத்ரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பாகும்.

கோவில் பிரகாரத்தை 3 முறை இடமிருந்து வலமாக சுற்றி வரவும்.

சுற்றி வந்த பின்பு பிரகார தலத்தில் விழுந்து கும்பிடகூடாது.

கோவிலில் கொடி கம்பம் இருக்கும் கொடி கம்பத்திற்கு முன்பு தான் விழுந்து கும்பிட வேண்டும்.

கும்பிடுபவரின் தலை வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

உடல் அங்கங்கள் முழுவதும் தரை மீதும் பட வேண்டும்.

நமஸ்கரித்துவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து வரவேண்டும்.

கோவிலை விட்டு வெளிவரும் முன்பு மறுபடியும் சண்டிகேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பு தரும்.

பிரதட்சணத்தின்போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும்.

நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யக் கூடாது.

இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் போது பிரட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.

ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்.

நல்லெண்ணை ஆரோக்கியத்தை அளிக்கும். தேங்காய் எண்ணை வசீகரத்தை அளிக்கும்.

இலுப்பெண்ணை சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறுஜென்மத்திலும் நன்மை அளிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com