நம்பாடுவான் கதை-அறிமுகம்

இது காரணப்பெயர். “நம்மைப் பாடுவான்” என்று பெருமானால் சொல்லப்பட்டதால் நம்பாடுவான் என்றே ஆயிற்று. தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்த போதிலும் அவருடைய பக்தி மிக உயர்வாய் இருந்தது.
நம்பாடுவான் கதை-அறிமுகம்
Published on

இந்த திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள மகேந்திர கிரியின் சாரலில் வசித்து வந்தவன் நம்பாடுவான் என்ற பக்தன்.

இது காரணப்பெயர். "நம்மைப் பாடுவான்" என்று பெருமானால் சொல்லப்பட்டதால் நம்பாடுவான் என்றே ஆயிற்று.

தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்த போதிலும் அவருடைய பக்தி மிக உயர்வாய் இருந்தது.

அதிகாலை பொழுதில் எழுந்து நீராடி, ஆலயத்தை நாடிச்செல்வார்.

குலத்தினால் தாழ்ந்தவன் என்று அனுமதிக்கப்படாத போதிலும், தொலைவில் நின்று குறுங்குடி நம்பியை நினைத்து மனங்கசிந்து பாடுவார்.

ஒரு நாள் இரு நாளல்ல. பத்து ஆண்டுகளாக பாடிக்கொண்டிருக்கிறார் நம்பாடுவான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com