நாயாக வந்து காட்சி அளித்த அக்னீஸ்வரர்

சுவாமி அப்போது அசரீரியாக, முன்பு உனக்குத் திருவடி தீட்சை தந்தோம். இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் என்று அருளினார்.
நாயாக வந்து காட்சி அளித்த அக்னீஸ்வரர்
Published on

ஹரதத்தரது மனைவி கமலாட்சி, அடுக்களையில் உணவு சமைத்து வைத்திருந்த போது ஒரு நாய் அங்கு புகுந்து அதில் ஒரு கவளத்தை உண்டது.

புலையன் சொன்னது போல் காவிரி மணல் யாவும் சிவன் என்றால் நாயும் சிவன் தானே! அப்படியானால் நாய் உண்டதை சிவன் உண்டதாகக் கருதி அதனை பிரசாதமாக ஏற்று உண்பது தானே முறை எனக்கருதினார் ஹரதத்தர்.

அப்போது அந்த நாய் சிவனாகக் காட்சி தந்து மறைந்ததை இருவரும் கண்டனர்.

சுவாமி அப்போது அசரீரியாக, முன்பு உனக்குத் திருவடி தீட்சை தந்தோம்.

இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் என்று அருளினார்.

ஆனந்தக் கூத்தாடிய ஹரதத்தர் திருவருளை வியந்தவராக நாய் உண்ட சேஷத்தை உண்டு, வீட்டிலுள்ளோரையும் உண்ணச் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com