முருகன் 108 போற்றி!

பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி திருச்செந்தில் வளர் சேவகபோற்றி
முருகன் 108 போற்றி!
Published on

ஓம் அருவாம் உருவாம் முருகாபோற்றி

திருவார் மறையின் செம்பொருள்போற்றி

ஆறுமுகத்தெம் அரசேபோற்றி

மாறுகொள் சூரரை வதைத்தாய்போற்றி

இருள்கெடுத்திருன்பருள் எந்தாய்போற்றி

உருள்பூங்கடம்பணி உறவோய்போற்றி

ஈசற்கு இனிய சேயேபோற்றி

மாசறு திருவடி மலரோய்போற்றி

உறுநர்த் தாங்கும் உறவோய்போற்றி

செறுநர்த் தேய்த்த செவ்வேள்போற்றி

ஊனில் ஆவியார் உயிர்போய்போற்றி

கானில் வள்ளியின் கணவபோற்றி

எழில்கொள் இன்ப வாரிதிபோற்றி

அழிவிலாக் கந்தனாம் அண்ணல்போற்றி

ஏறுமயிலூர்ந்த தேகுவாய்போற்றி

கூறுமன்பர்க்குக் குழைவாய்போற்றி

ஐயனாய் உலகை ஆக்குவாய்போற்றி

செய்ய மேனியனே தேவேபோற்றி

ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய்போற்றி

பருவம் முதிராப் பண்பேபோற்றி

ஓவற இமைக்கும் ஒளியேபோற்றி

மாமுதல் தடிந்த மறவபோற்றி

ஒளவியம் அறுத்தோர்க்கு அருள்வோய்போற்றி

தெய்வம் எல்லாந்தொழும் செய்யாபோற்றி

எக்கும் வேலுடை இறைவாபோற்றி

வெக்குதல் அற்றார் விளக்கேபோற்றி

கந்தா மணமார் கடம்பாபோற்றி

காப்பாய் படைப்பாய் கழிப்பாய்போற்றி

மூப்பீறற்ற முதல்வாபோற்றி

கிள்ளை மொழியுமை பிள்ளாய்போற்றி

கள்ளப் புலனைக் களைவாய்போற்றி

கீழறும் அடியர் கிழவோய்போற்றி

குன்றும் குழைந்தோட் குமரபோற்றி

என்றும் இளைய ஏறேபோற்றி

கூம்புகைத் தேவர் கோவேபோற்றி

பாம்பணி சிவனார் பாலகபோற்றி

கெண்டைக் கண்ணியர் கேள்வபோற்றி

அண்டினோர்க் கருளும் அங்கணபோற்றி

கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய்போற்றி

வீடில் வீடருள் விமலபோற்றி

கைவேல் கொண்ட காவல்போற்றி

நைவேற் கருள்வாய் நாயகபோற்றி

கொடைக் கடன்கொண்ட குழகபோற்றி

படைக்கடல் தலைவ பரனேபோற்றி

கோதில் அமிழ்தே குருமணிபோற்றி

போதில் அமர்ந்த பொன்னேபோற்றி

சிவபிரான் கண்வரு சேயேபோற்றி

நவ சரவணத்தில் நகர்ந்தாய்போற்றி

அறுவுரு அமைந்தே ஆடினாய்போற்றி

அறுமீன் பாலுண் அமரபோற்றி

பெருமை பிறங்கு பெரியோய்போற்றி

நான் முகமைச் சிறை நாட்டினாய்போற்றி

மான்மகள் வள்ளியை மணந்தாய்போற்றி

செங்கண் கடாவைச் செலுத்தினாய்போற்றி

அங்கண் குறிஞ்சிக்கு அரசேபோற்றி

இறைவனுக்கரும்பொரள் இசைந்தாய்போற்றி

மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய்போற்றி

பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி

திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

ஆவிணன் குடி ஆண்டாய்போற்றி

மேவி ஏரகம்வாழ் மிக்கவபோற்றி

குன்று தோறாடும் குழந்தாய்போற்றி

துன்று பழமுதிர் சோலையாய்போற்றி

திசைமுகம் விளக்கும் செம்முகபோற்றி

இசைபெரு வேள்வி அன்முகபோற்றி

செங்களம் ஓர்க்கும் திருமுகபோற்றி

மங்கல மான வானவபோற்றி

வள்ளிபால் நகைகொள் மாமுகபோற்றி

திங்களின் ஒளிரும் சீர்முகபோற்றி

ஆர்வலர் ஏத்த அருள்முகபோற்றி

சீர்வளர் அழகின் செல்வாபோற்றி

மணிமுடி புணையாறணிமுடிபோற்றி

துணையடி தொழுவார்க் கணைவாய்போற்றி

செவியீராறுடைச் செம்மால்போற்றி

கவித்தொடை புனைந்தோட் கந்தாபோற்றி

பன்னிரு கண்ணுடைப்பண்ணவபோற்றி

என்னிரு கண்ணின் இலகுவோய்போற்றி

பொருவில் ஒருவனாம் புலவபோற்றி

அருணகிரிக்கு அருள் அமலபோற்றி

நக்கீரற் கருள் நாதாபோற்றி

தக்க சங்கத்தமிழ் தந்தாய்போற்றி

குமர குருபரற் கருளினைபோற்றி

பந்த பாசங்களைப் பறிப்போய்போற்றி

கந்தபுரி வாழ் வுகந்தோய்போற்றி

தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய்போற்றி

பொய்யிலான மனத்துட் புகுவோய்போற்றி

கோழி வெல்கோடிக்கோவேபோற்றி

ஊழி தோறூழி உள்ளாய்போற்றி

செய்யாய் சிவந்த ஆடையாய்போற்றி

மெய்யெல்லாம் வெண்ணீறணிவோய்போற்றி

மேவலர் மடங்கலாம் முத்தபோற்றி

வேர்கள் சிறைமீள் சீர்வலாய்போற்றி

சேவலும்மயிலும ¢சேர்த்தோய்போற்றி

போர்மிகு பொருந புரநல போற்றி

ஏர்மிகு இளஞ்சேய் தார்விலாய்போற்றி

பாரகம் அடங்கலும் பரவுவோய்போற்றி

தமிழ்மொழி இன்பில் தழைப்பாய்போற்றி

அமிழ்திற்குழைத்த அழகாபோற்றி

கல்வியும் செல்வமும் கனிந்தருள்போற்றி

இன்பார் இளைய ஏந்தால்போற்றி

என்பால் அருள்புரி என்றும்போற்றி போற்றியே...

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com