முதல் சூரிய கோவில்

மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.
முதல் சூரிய கோவில்
Published on

பஞ்சாபை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது. அவன் மாகாஸ்களை வரவழைத்தான்.

நோய் குணமாகவே, இப்போது பாகிஸ்தானில் உள்ள "மூல்தான்" நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான்.

2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த ஆலயம்தான் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோவில்.

இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது.

மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது.

பிரபல மன்னனான லலிதாதித்ய முக்தா பீடன் என்பவன் இங்கே சூரியனுக்கு ஒரு கோவில் கட்டினான்.

இந்தக் கோவில், கிரேக்க ஆலய அமைப்பில் கட்டப்பட்டது. பின்னர் வந்த இஸ்லாமிய மன்னன் சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி.1391&1414) இந்தக் கோவிலை இடித்து நாசமாக்கி விட்டான்.

சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோவிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோவில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்க தேவன் (கி.பி.1238&64) இதைக் கட்டினான்.

இப்போது இந்தக் கோவிலின் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.

X

Maalai Malar
www.maalaimalar.com