மலை மீது அமைந்த சரஸ்வதி கோவில்

அங்கு சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.
மலை மீது அமைந்த சரஸ்வதி கோவில்
Published on

நாகூர்

நாகப்பட்டினத்திற்கருகில் உள்ள நாகூர் என்னும் ஊரில் நாகராசா கோவிலில் சரஸ்வதியின் செப்புத் திருமேனி உள்ளது.

அங்கும் சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.

மு.ஈ.ச. மலை

பவானிசாகர் அருகில் மாதம்பாளையம் ஊராட்சியில் மாராயிபாளையம் என்னும் கிராமத்தில் ஒரு சிறு மலையில்

முருகன், ஈஸ்வரன், சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித் தனி மூலஸ்தான கோவில்கள் உள்ளது.

புதியதாக கட்டப்பட்ட இக்கோவில் மலை புஞ்சை புளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் செல்லும் வழியில்

பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.

இக்கோவிலுக்குச் செல்ல 800 படிகள் கொண்ட பாதையும், கனரக வாகனங்கள் செல்ல தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

வடநாட்டில் புஷ்கரத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் மலைமீது சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட கோவில் இது ஒன்றே.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com