மகாபலிக்காக கண்ணை இழந்த சுக்கிரன்

இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார். அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.
மகாபலிக்காக கண்ணை இழந்த சுக்கிரன்
Published on

வயல்கள், அழகிய வீடுகள், அலங்கரிக்கப்பட்ட இடங்கள், படுக்கையறை போன்றவற்றில் வாசம் செய்பவர்.

பால் உணர்ச்சியை தூண்டும் கிரகம். மழைக்கு காரகர்.

மனித உடலில் கழுத்து, தொண்டை, மார்பு, இடுப்பு பக்கம் அசுத்த ரத்த குழாய்கள் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

சுக்கிரன் ஜாதகத்தில் அமையும் இடத்தை பொருத்து பால்வினை நோய்கள், சர்க்கரை வியாதி, கண்நோய், வீரியமின்மை, சிறுநீர் வழி வியாதிகள் உண்டாகிறது.

ஒற்றை கண்ணை உடையவர்.

மகாபலி சக்ரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்ட பொழுது சுக்ராச்சாரியார் அவ்வாறு கொடுக்க வேண்டாம் என்று தடுத்தார்.

மகாபலி அவர் சொல்லைக்கேளாமல் நீர்வார்த்து மூன்றடி மண் கொடுக்க முற்படும்பொழுது நீர்வார்க்குன் கெண்டியின் மூக்கினுள் வண்டாக சுக்கிரர் உருவெடுத்து நீர் வராமல் அடைத்துக் கொண்டார்.

இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.

அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com