மாமியார்-மருமகளுக்கு வாய்ப்பூட்டு-வித்தியாசமான பிரார்த்தனை

சிறுவாபுரி கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் அங்குள்ள கம்பியிலான கூண்டில் பூட்டு போட்டு செல்கிறார்கள். இதற்கு ஒரு கதை இருப்பதாக ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
மாமியார்-மருமகளுக்கு வாய்ப்பூட்டு-வித்தியாசமான பிரார்த்தனை
Published on

சிறுவாபுரி கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் அங்குள்ள கம்பியிலான கூண்டில் பூட்டு போட்டு செல்கிறார்கள்.

இதற்கு ஒரு கதை இருப்பதாக ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் மாமியார்-மருமகள் சண்டை ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

இதில் சிக்கி தவிக்கும் மாமியார்கள், மருமகள்கள் வாயை அடைக்கும் வகையிலும் மருமகள்கள் இனிமேல் மாமியார்கள் சண்டைக்கே வராமல் அடங்கி போகும் வகையிலும் ஒருவருக்கொருவர் இங்கு பூட்டுகளை போட்டு பூட்டி செல்கின்றனர்.

பின்னர் அந்த சாவிகளை அவர்கள் ேகாவில் உண்டியலிலோ அல்லது அங்குள்ள திருக்குளத்திலோ வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதுபற்றி கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, "எதற்காக பக்தர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் பிரார்த்தனையை வெளியில் சொல்லக் கூடாது என கூறி நழுவி விடுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com