கிருத்திகையில் அவதரித்த சித்தர்கள் ஏராளம்

இவர் அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். காகபுஜண்டரின் முதன்மையான சீடர் ஆவார். இவர் ரோமில் இருந்து வந்ததால் ரோம ரிஷி என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.
கிருத்திகையில் அவதரித்த சித்தர்கள் ஏராளம்
Published on

ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் இத்தனை பாக்கியமும் ஒருசேர ஒருங்கே கிடைத்து விடுவதில்லை.

இந்தப் பாக்கியங்களை பெற சித்தர்களை நாடி தியானம் செய்து வழிபட்டால் நன்மை உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்த அல்லது முக்தி பெற்ற சித்தர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

மயிலாடுதுறை பால் சுவாமிகள் (மார்கழி&கார்த்திகை), ஞானாந்தகிரி சுவாமிகள் (தை&கார்த்திகை) மதுரை காதகிணறு நடனகோபால சுவாமிகள் (மார்கழி&கிருத்திகை) கிருத்திகையுடன் தொடர்புடையவர்கள்.

கொடுமுடி அருகே சிவகிரியில் உள்ள ராமானந்த சித்தர் ஜீவ சமாதியில் கிருத்திகை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முழு பயனை அடைய வேண்டுமானால் ரோமரிஷி சித்தரை நாடி செல்ல வேண்டும்.

இவர் அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். காகபுஜண்டரின் முதன்மையான சீடர் ஆவார்.

இவர் ரோமில் இருந்து வந்ததால் ரோம ரிஷி என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் இவர் உடல் முழுக்க முடி (ரோமம்) இருந்ததால் இவருக்கு ரோம ரிஷி என்ற பெயர் ஏற்பட்டதாக ஒரு கருத்து உண்டு.

ஆனால் போகர் தனது பாடலில், "ரோமரிஷி செம்படவருக்கும் குறத்திக்கும் பிறந்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரோமரிஷிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

அதே போன்று அவரது அவதாரம் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com