சந்திரனை வழிபடும் முறைகள்

சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது,இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,
சந்திரனை வழிபடும் முறைகள்
Published on

திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்),

பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது,

செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது,

முத்து பதித்த மோதிரம் அணிவது,

வெங்கடாசலபதியை தரிசிப்பது,

திருப்பதி சென்று வருவது,

சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது,

ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது,

இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,

நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது,

வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பது,

வெள்ளை நிற ஆடை அணிவது,

எப்போதும் வெள்ளை நிறக்குட்டை வைத்திருப்பது,

அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது.

சந்திராயன விரதம் என்ற முறையில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று 1 கவளம் அடுத்த நாள் 2 கவளம் என வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு கவளம் மட்டும் உணவு சேர்த்து மறுபடியும் பவுர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது மிக, மிக நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com