பிரமிக்க வைக்கும் கூந்தல் அலங்கார பெண் சிற்பம்

ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர்கள் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது. அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள்.
பிரமிக்க வைக்கும் கூந்தல் அலங்கார பெண் சிற்பம்
Published on

பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன.

அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை.

சிவலிங்க சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்தச் சிற்பம் காணக் கிடைக்கின்றது.

அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னிதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது.

ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர்கள் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள்.

அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரமிக்க வைப்பதாக உள்ளது.

அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளாள்.

X

Maalai Malar
www.maalaimalar.com