அதிகார நந்தியும் பூத வாகனமும்

அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.
அதிகார நந்தியும் பூத வாகனமும்
Published on

இறைவன் அழிக்கும் தொழிலை மேற்கொள்ளும் சங்கார மூர்த்தியாய் இருக்கின்ற நிலையினையும்,

செய்த பாவங்களுக்கு ஏற்ப மரணத்தை வழங்கும் நிலையினையும் குறிப்பாய் உணர்த்தும் தன்மை உடையதாக

அதிகார நந்தியும் பூதவாகனமும் விளங்குகின்றன.

அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.

(விருத்தக்கிரம மூர்த்தி என்பது ஐந்தொழில் செய்யும் இறைவன் ஒன்றாக இணைந்து ஓர் உருவில் காட்சி தருவது ஆகும்).

எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீ அன்னை பராசக்தி திருவருள் உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த

ஸ்ரீ உண்ணாமலை அம்மன் அன்ன வாகனத்தின் மேல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com