அர்ஜுனன் அவதார நாள்

கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன். பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.
அர்ஜுனன் அவதார நாள்
Published on

பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.

பத்துவித பெயர்களை உடையவன் அவன்.

கூர்மையான பார்வையை உடையவன்.

நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான்.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார்.

கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.

எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சிறப்பு பலன்கள்

1. பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

2. பங்குனி உத்திரத்தன்று வேண்டுதல்களின் பேரில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோரை பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

3. பங்குனி உத்திரத்தன்று சுவாமி கடல், ஏரி, கடாகம் போன்ற இடங்களில் தீர்த்தம் கொடுப்பார்.

அப்போது அதில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com