பிரதோஷ சிறப்புடைய தலங்கள்

திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல.சுருட்டப்பள்ளியில் சிவன் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
பிரதோஷ சிறப்புடைய தலங்கள்
Published on

கடல் நஞ்சினை ஈசன் வாங்கி உண்ட திருப்பதி என்று காவிரிக்கரையின் தென்கரைத் தலமான திருப்புள்ளமங்கை (பசுபதி கோயில், ஆலந்துறை) குறிப்பிடப்படுகிறது.

திருநீலக்குடி என்னும் தேவாரத் தலத்திறைவரும், அப்பருக்குக் கட்டமுதளித்த திருப்பைஞ்ஞீலி தலத்திறைவரும் `திருநீலகண்டேஸ்வரர்' என வழங்கப் பெறுகின்றனர்.

அதுபோல இலுப்பை பட்டு என வழங்கும் திருப்பழ மண்ணிப் படிக்கரையில் பஞ்சபாண்டவருள் முதல்வரான தருமனும், துணைவி திரவுபதியும் போற்றி வணங்கிய வடிவம் நீலகண்டேஸ்வரர் என்று கூறப்பெறுகின்றது.

திரு அம்பர் மாகாளம் என்ற ஊரில் உறை இறைவந் `காள கண்டேஸ்வரர்' எனப் பெறுகின்றார்.

பள்ளிகொண்ட பரமர்

திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல. ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் சிவன் சயனக்கோல கதை வடிவச் சிற்பம் காணப்பெறுகின்றது.

தாயார் மங்களேஸ்வரியின் மடியின் மேல் தலை வைத்து வானோக்கியவாறு சிவன், விஷம் அருந்தியபின் இருந்த சயன வடிவ தோற்றம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாரமங்கலதக் கோயில்

பிரதோஷ நாட்களில் மாலை நேரத்தில் சூரிய பூஜையும் நடைபெறும் அற்புதக் திருக்கோயில் தாரமங்கலம் என்னும் ஊரில் அமையப் பெற்றுள்ளது. மேற்கு பார்த்த இத்திருக்கோயிலில் அமைந்துள்ள மூன்று நந்தியின் கொம்புகள் வழியே சூரிய ஒளியானது கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மேல் விழும் வண்ணம் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதோஷ பூஜையுடன் சூரிய பூஜையினையும் ஒருங்கே தரிசித்துப் பேறு பெற விரும்புவோர் செல்ல வேண்டிய ஊர் தாரமங்கல்ம் ஆகும்.

பிற கோயில்கள்

பிரதோஷ நாயகரான திருநீலகண்டரைப் போற்றும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள காரமடையில் கலைச்சிறப்பு வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பத்மநாபபுரத்தில் `நீலகண்டசுவாமி கோயில்' அமையப் பெற்றுள்ளது.

திருநீலகண்டப் பதிகம்

பிரதோஷ காலத்தில் படிக்க வேண்டிய செய்வினை

கோளாறுகளை நீக்கும் திருஞான சம்பந்தரின் திருநீலகண்டப் பதிகம்

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லுமஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பது முந்தமக் கூனமென்றே

கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடி யோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

காவினையிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்

ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென றிருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுது நாமடி யோம்

தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

மூலைத்தட மூழ்கிய போகங் களுமற்றெவையு மெல்லாம்

விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

இலைத்தலைத் சூலமுந் தண்டு முழவு மிவை யுடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

விண்ணுலக காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்

புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படம் புண்ணியரே

கண்ணிம யாதன மூன்றுடை யீரங் கழலடைந்தோம்

திண்ணிட தீவினை தீண்டப்பெ றாதிருநீலக்கண்டம்

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே

உருகி மலர்க்கொடு வந்துமை யேந்துதுநாமடியோம்

செருவி லரக்கனைச் சீரிலடர்த்தருள் செய்தவரே

திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாது செய்து

தோற்ற முடைய அடியு முடியும் தொடர்வரியூர்

தோற்றினுந் தோற்றந் தொழுது வணங்குதும் நாமடியோம்

சீற்றம தாம்பினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

சாக்கியப் பட்டுஞ்சமணுரு வாகி யுடையழிந்தும்

பாக்கியமின்றி யிருதலைப் போகமும் பற்றும் விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்

தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வம் கழலடைவான்

இறந்த பிறவியுண்டாகி லிமையவர் கோனடிக்கண்

திறம்பயின் ஞானசம் பந்தன் செந்தமிழ் பத்தும்வல்லார்

நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com