குழந்தையை காத்தவள் முண்டகக்கண்ணி அம்மன்

முண்டகக்கண்ணி அன்னையின் தீர்த்தமும் விபூதியும் அம்மை நோயை குறைத்து விடும். `கண் பார்வை அளிக்கும் கற்பகமாக' முண்டகக்கண்ணி அம்மன் காட்சி தருகின்றாள்.
குழந்தையை காத்தவள் முண்டகக்கண்ணி அம்மன்
Published on

ஓரு ஏழைத்தாய், அவள் குழந்தைக்கு ஏதோ உடல்நலம் சரியில்லை. எங்கோ முயன்று பத்து ரூபாயைத் திரட்டிக்கொண்டு அவள் ஒரு டாக்டரிடம் குழந்தையைக் தூக்கிக்கொண்டு ஓடுகின்றாள்.

குழந்தையை பார்த்த அந்த டாக்டர், `பல சோதனைகளை செய்து பார்த்த பின்னரே மருந்து தரவேண்டும். அதற்கு நிறையப்பணம் செலவாகும். உன்னிடமோ பணம் இருக்காது. எனவே நீ, உடனே எழும்பூரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விடு' என்று கூறிவிடுகின்றார்.

அந்த தாய் கலங்கினாள். கதறினாள். அவள் வேறு என்ன செய்வாள்? நூற்றுக்கணக்கில் எங்கே சென்று பணத்தை புரட்டுவாள்? துவண்டுபோன தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அம்மனின் சன்னதிக்கு வருகின்றாள். அழுகையும், ஏக்கமும், வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றமும் அவளிடம் சினத்தை எழுப்புகின்றன.

`ஆத்தா! உன்னைத்தான் நான் எப்போதும் துணையாக நம்பினேன். உன்னைத்தானே எப்போதும் வந்து வணங்கினேன். என் குழந்தையை இப்படி செய்து விட்டாயே? நீதான் காப்பாற்ற வேண்டும். இதற்கு ஏதாவது ஆச்சு என்றால் என்னால் அதைத் தாங்கவே முடியாது' என்று கதறிப் புலம்பியபடியே, அக்குழந்தையை அம்மன் சன்னதியில் கிடத்தினாள்.

அன்னையின் தீர்த்த பிரசாதத்தை தெளித்தவுடன் அந்த குழந்தை கண்விழித்துப் பார்த்தது. விபூதி குங்குமத்தை பூசியவுடன் நோயின் வேகம் சற்று குறைந்தது. சிறிது நேரத்தில் அதன் நோயின் வேகம் முழுமையாக தணிந்து விட்டது. பழையபடி எழுந்து அது சிரித்து விளையாடத் தொடங்கி விட்டது.

இப்படி ஓர் அதிசயம் நடந்த இடம் இந்த முண்டகக்கண்ணி அம்மன் கோயில். இதைப் பரவசத்துடன் அன்பர்கள் கூறுவதை இன்றும் கேட்கலாம்.

அன்னையின் இத்தகைய அதிசய சக்தியை அருளை நினைத்தபடி அவள் முன்னே வந்து நிற்கும்போது, நிற்பவர் உள்ளத்திலேயேயும் ஒரு தெய்வீகச்சுடர் தோன்றி அவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றதையும் காணலாம்.

வேப்பிலையால் தடவும்போது, அம்மை முத்துக்கள் ஆச்சரியமான வகையில், அகலுகின்றன. வெம்மையும், எரிச்சலும் தீருகின்றன. குளிர்ச்சி உடலிலே பரவி நோயின் கடுமையைக் குறைக்கின்றது.

இந்த அற்புதங்களை தன்னை நினைத்து வேண்டும் வீடுகளில் எல்லாம் செய்து, அனைவரையும் நலமாக்கி வருபவள் இந்த முண்டகக்கண்ணி ஆவாள்.

அருமருந்தான அன்னை

கண்ணிலே அம்மை முத்து வந்தால் மிகவும் கலங்குவார்கள். கண் கெட்டு விடக்கூடாதே என்று எண்ணிப் பரிதவிப்பார்கள். முண்டகக்கண்ணி அம்மையின் தீர்த்தமும் விபூதியும் அந்த கவலையைத் தீர்த்துவிடும். அம்மை நோயைக் குறைத்து விடும்.

அம்மை நோயின் கொடுமையை தணித்து நலம் செய்வது மட்டும் அல்லாமல், அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாகவும் அன்னை முண்டகக்கண்ணி அம்மன் விளங்குகின்றாள். இந்த செய்திகளை பக்தி பரவசத்துடன் பலரும் கூறுவதை கேட்கலாம்.

வேப்பிலையால் தடவும்போது, அம்மை முத்துக்கள் ஆச்சரியமான வகையில், அகலுகின்றன. வெம்மையும், எரிச்சலும் தீருகின்றன. குளிர்ச்சி உடலிலே பரவி நோயின் கடுமையைக் குறைக்கின்றது. இந்த அற்புதங்களை தன்னை நினைத்து வேண்டும் வீடுகளில் எல்லாம் செய்து, அனைவரையும் நலமாக்கி வருபவள் இந்த முண்டகக்கண்ணி ஆவாள்.

கண்பார்வை இழந்த ஒருவர், நாற்பது நாட்கள், ஒரு மண்டல காலம் இந்த கோயிலுக்கு வந்து வணங்கி பூசித்து மீண்டும் தம் கண்பார்வை பெற்றுள்ளார். இப்படி அன்னையின் அருளால் பார்வை பெற்றவர்கள் பலருடைய வரலாறுகளை இங்கே கேட்கலாம். `கண் பார்வை அளிக்கும் கற்பகமாக' முண்டகக்கண்ணி அம்மன் இங்கே காட்சி தருகின்றாள் என்பதை இது விளக்கும்.

பிரசவ வேதனையால் துடிக்கும் பெண்களுக்காக அன்னையை வந்து வேண்டிக் கொண்டு செல்பவர் பலர். இவள் விபூதியை பூசிக்கொண்டதும் அப்பெண்ணின் வேதனை விலகி சுகப்பிரசவம் ஆகிவிடும். தாம் பெற்ற பிள்ளையைக் கொஞ்சி அந்த தாய்மார் மகிழ்வர்.

எல்லா நோய்களுக்கும் அன்னையின் இத்திருக்கோயிலில் அவருடைய அருட்பிசாதமாக வேப்பிலையும், விபூதியும் நீருமே தரப்படுகின்றன.

`அம்மா எங்களைப் போன்ற ஏழைகளின் தெய்வம் நீதான். எங்கள் பாரத்தை எல்லாம் உன்மீது போட்டு விட்டோம். நீயே எங்களைப் பார்த்துக் கொள். எங்களுக்கு நோய் நொடி வந்தால் டாக்டரிடம் போவோம். ஆனால் உன் கருணையைத்தான் முழுமையாக நம்புவோம்' என்பவர்கள் பலர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com