ஆறுபடை வீடுகளும் தத்துவங்களும்

ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.
ஆறுபடை வீடுகளும் தத்துவங்களும்
Published on

ஆறுபடை வீடுகள் :

1. திருப்பரங்குன்றம்

2. திருச்செந்தூர்

3. பழனி

4. சுவாமி மலை

5. திருத்தணி

6. பழமுதிர்ச்சோலை என்பனவாகும்.

ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் :

அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார்.

ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.

1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்

2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்

3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்

4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்

5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி

6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை

மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.

ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும்.

வளமான வாழ்க்கை அமையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com