

1. கிழக்கு முகம் - ஹனுமார் பிரதிவாதி சத்ரு உபத்திரவம் நீங்கும்.
2. ஹயக்ரீவர் குதிரை முகம் - ஜன வசீகரணம் வாக்குசித்தி வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.
3. நரசிம்மம் சிங்கமுகம் - சகல வித பய தோஷங்களும் பூத ப்ரேத துர்தேவதா தோஷங்களும் நீங்கும்.
4. வராகர் முகம் - சகல தரித்திரமும் நீங்கி மங்கள கரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.
5. கருடன் முகம் - சகல விஷஜ்வர சரீர ரோகங்கள் நீங்கும் ஸகல விதமான தோஷங்களும் நீக்கப்பட்டு மேன்மை பெறலாம். ஸ்ரீ பஞ்சமுப ஆஞ்சநேயரை சேவித்தால் நவகிரஹ தோஷங்களும் நீங்கும்.
என்றும் நமக்கு வேண்டியது பலம் ஆத்மபலம், மனோபலம், புத்திபலம், தேகபலம், பிராணபலம், சம்பத்பலம் இந்த ஆறு பலங்களையும் பெற்று வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாஷம் அவசியம். ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.
அனுமன், மகாபலிஷ்டன், அஞ்சனாகுமாரன், ராமேஷ்டன், வாயுபுத்திரன், அர்ஜுன சகன், அமிதபாராக்ரமன மாருதி, சுந்தரன, பிங்காட்சன, ஆஞ்சநேயன, மாருதிராயன, சஞ்சீவராயன், பஜ்ரங்பலி, ஸ்ரீராமதாசன, அனுமந்தையா, ஆஞ்சநேயலு, மகாவீர் போன்ற பல நாமங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உண்டு. ஸ்ரீ அனுமான் பஞ்சபூதங்களை மட்டுமா? பஞ்சேந்திரியங்களையும் கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியம் 5 இவைகளையும் வசப்படுத்தியவர்.