ஆனிதிருமஞ்சன விரதத்தின் பயன்கள்

ஆனி திருமஞ்சன தினத்தன்று விரதமிருந்து நடராஜரை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும்.
ஆனிதிருமஞ்சன விரதத்தின் பயன்கள்
Published on

ஆனி திருமஞ்சன தினத்தன்று விரதமிருந்து நடராஜரை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும். மக்கள் நல்ல பயனை அடைவார்கள். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஆண்-பெண் இருபாலரின் திருமணம் போன்ற வைபவங்கள் நடக்கும்.

இந்த ஆனியை தொடர்ந்து ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை என மாதங்கள் வளர்ந்து வரும். அந்த காலங்களில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்.

அனைத்து பக்தர்களும் அவரவர்களின் ஊர்களுக்கு அருகே உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெற கூடிய ஆனி திருமஞ்சன மகாஅபிஷேகத்தில் தங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை கொடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

ஆனி திருமஞ்சன வழிபாடு சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நடராஜர் சன்னதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com